போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி வால்பாறையில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கேடாக அமைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச் செயலாளர் மயில் கணேசன் மற்றும் வால்பாறை அமீது முன்னிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்கேடாக அமைந்துள்ளதாகவும், தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வருவதாகவும், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டு உள்ளதாகவும், திமுக அரசை கண்டித்து போதைப்பொருள் பழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தி வால்பாறை அதிமுக கட்சியினர் 300 க்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 11 மணியில் அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் கையில் கொடி ஏந்தி கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மனித சங்கிலி போராட்டம் காந்தி சிலை வரை நடைபெற்றது. போதைப் பொருட்கள் மயக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விஜயகுமார், பொன் கணேசன், சாளவுதீன், மோகன், RR பெருமாள், ஆடிட்டர் சண்முகவேல், itwing சண்முகம், sks பாலு, சசி, ரமேஷ், பாபு, விமலா மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...