நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து சங்கு ஊதி போராட்டம் நடத்த சாலை பணியாளர் முடிவு


தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை தமிழக அரசு தனியாருக்கு வழங்கி இருப்பதைக் கண்டித்து நெடுஞ்சாலை அலுவலகங்கள் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்துவது என கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அம்சராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக நெடுஞ்சாலையை பராமரிக்கும் பணியை மாவட்டம் தோறும் தமிழக அரசு தனியாருக்கு வழங்கி வருவதாகவும் பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுக்கி உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம் பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருக்கும் அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அம்சராஜ் தெரிவித்தார்.

மேலும் 2002-ம் ஆண்டு 10000 சாலை பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 6-ம் தேதி அனைத்து நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம் முன்பாக சங்கு ஊதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என அம்சராஜ் தெரிவித்தார்.

ஏப்ரல் 22-ம் தேதி சாலை பணியாளர் சங்க மாநில பிரதிநிதித்துவ கூட்டத்தினை கோவையில் நடத்துவது எனவும். ஏப்ரல் 25-ம் தேதி அரசு ஊழியர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சாலை பணியாளர்களும் கலந்து கொள்வது எனவும் இன்று நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்சராஜ் தெரிவித்தார்

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...