குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் முற்றுகை - அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

மதம், மொழி, பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரக்கூடிய நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், இஸ்லாமிய இலங்கை மக்களின் குடியுரிமைகளை மறுக்காதே, மதம், மொழி பெயரால் இந்திய மக்களை பிரிக்கும் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயற்சி செய்த அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...