பீளமேட்டில் தொழிலதிபர் வீட்டில் 177 பவுன் நகை, ரூ.9 லட்சம் பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

பீரோவில் வைத்திருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9.75 லட்சம் கொள்ளை போயிருப்பது கண்டு தொழிலதிபர் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு செங்காளியப்பாநகரை சேர்ந்தவர் மனோகரன்(64). தொழில் அதிபர். இவரது மனைவி திருச்சியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களை பார்ப்பதற்காக கடந்த மாதம் 23ம் தேதி திருச்சி சென்ற மனோகரன் அங்கு தங்கினார். இதற்கிடையே நேற்று (மார்ச்.14) அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உடனே மனோகரனை செல்போனில் தொடர்புகொண்டு விவரத்தை கூறினர். உடனே மனோகரன் திருச்சியில் இருந்து கோவை திரும்பி தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு வீட்டில் இருந்த உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

பீரோ திறந்து கிடந்தது. உள்ளே வைத்திருந்த 177 பவுன் தங்க நகை மற்றும் ரூ.9.75 லட்சம் கொள்ளை போயிருப்பது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சில நாட்களாக ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மனோகரன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...