கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு - நீநிமன்றத்தில் பாஜக வழக்கு

பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.


கோவை: கோவையில் வரும் 18-ம் தேதி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் முதல் ஆர்.எஸ்.புரம் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட் ஷோ மற்றும் அதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதற்காக பாஜக சார்பில் அனுமதி கேட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியிருந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பொதுத்தேர்வு மற்றும் இதுவரை கோவையில் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கியத்தில்லை உள்ளிட்ட காரணங்களை கூறி ரோட் ஷோ நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் அதிகாரிகளுடன் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஐஜி லவ் குமார் தலைமையிலான எஸ்.பி.ஜி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.



சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பிரதமர் நிகழ்ச்சிக்கான அனுமதி மறுப்பு மற்றும் மத்திய பாதுகாப்பு குழுவினருடனான ஆலோசனை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்டபோது தெளிவான ஒரு முடிவை இல்லாமல் கருத்து கூற முடியாது எனக் கூறி சென்றார்.

இதனையடுத்து பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையிலான பாஜகவினர் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குபிறகு இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறி சென்றார்.

இதனிடையே பிரதமரின் ரோட்ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு அவரச வழக்காக இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...