கோவையில் சிறுமியை வெறித்தனமாக கடிக்க துரத்திய தெரு நாய்கள் - சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ

சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பினார்.


கோவை:கோவை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மேலும் கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு உட்பட்ட சூப்பர் கார்டன் பகுதியில் சிறுமி ஒருவர் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை துரத்தியது. அதிர்ச்சி அடைந்த சிறுமி வேகமாக அலறிக்கொண்டு வீட்டில் உள்ளே நுழைந்ததால் தெரு நாயிடமிருந்து சிறுமி தப்பினார்.

தெருநாய்கள் சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னே அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெரு நாய் சிறுமியை துரத்திய காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...