தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் தாராபுரத்தில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே உள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடிக்கம்பம், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. அரசு பொதுச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள்,கொடிகள் போன்றவை வரையப்பட்டிருந்தால் அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள். அரசியல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை, காந்திசிலை, உடுமலை ரோட்டில் உள்ள பெரியார் சிலை, 5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே கட்சியினர் சுவர் விளம்பரங்கள், மேலும் வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...