வால்பாறையில் சாலையில் நடந்து சென்ற 7 காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில சமயம் யானை மனித மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதை வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகம் அதிகாரிகள் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்ட வழியாக ஏழு காட்டு யானைகள் நடந்து வந்து பொள்ளாச்சி சாலையில் நடந்து சென்றது.



எதிரே வந்த வாகனம் ஓட்டுநர்கள் பயந்து திருப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்த வால்பாறை வனச்சாராக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன காவலர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். திடீரென்று காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...