கவுண்டம்பாளையம் திமுக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதி திமுக கழக அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த கருத்துக்களை திமுக நிர்வாகிகளுடன் பரிமாறிக் கொண்டனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இதேபோல், கோவை பாராளுமன்றத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி DMK ITWing கலந்தாலோசனை கூட்டம் நேற்று (மார்ச்.18) கவுண்டம்பாளையம் பகுதி கழகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் களத்தில் தொகுதியில் செய்ய வேண்டிய சமூக ஊடக பிரச்சாரம் குறித்து மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலையில் திட்டமிடப்பட்டது.



உடன் தமிழ்மறை, மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ், பகுதி கழக செயலாளர் சகோதரர் சரத் விக்னேஷ், பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், மாவட்ட சிறுபாண்மை அணி அமைப்பாளர் ஆரோக்கிய ஜான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹரிஷ் மற்றும் மாவட்ட துணை, தொகுதி, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...