திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை

திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மதுரை மாவட்டம் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பறக்கும் படை C பிரிவு வாகனம் அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா தலைமையில், உதவி ஆய்வாளர் பழனியம்மாள், தலைமை காவலர் துரைபாபு, காவலர்கள் ஐதீஷ், பொன்ரகுராஜன் ஆகியோர் கொண்ட குழு சோதனைக்காக திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் இருக்கும் கிருஷ்ணா பேக்கரி அருகே அதிகாலை முதல் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இங்கு தனியார் சொகுசு பேருந்துகள் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் இடமான அந்த பகுதியில், சென்னையில் இருந்து கோவை வந்த A1 Travels சொகுசு பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டும், செல்போன் உபயோகித்துக் கொண்டும் இருப்பதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொடனர். மேலும் அவரது பைகளை சோதனை செய்ததில் கருப்பு கலர் கேரிபேக் பையில் பணத்தை கட்டி தனது பேக்கில் வைத்திருப்பது தெரியவந்தது.



இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மதுரை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (27) என்பதும், அவரது பையில், உரிய ஆவணங்கள் இன்றி 500 ரூபாய் பண்டல் 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது.

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ் (25) என்ற இளைஞர் ரஹ்மத்துல்லாஹ்வை அழைத்துச் செல்ல ஸ்கூட்டரில் வந்துள்ளார்.அவரும் பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லவே, உடனடியாக பறக்கும் படையினர் 14.94 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...