ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறையில் தளர்வு வேண்டும் - வணிகர் சங்க பேரவை கோரிக்கை

திருப்பூரில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு மாடுகளை வாங்கவும், விற்கவும் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பின் மாவட்ட தலைவர் குளோபல் பூபதி குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பின் மாவட்ட தலைவர் குளோபல் பூபதி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை காரணம் காட்டி சாதாரணமாக வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் ஆணைய விதிமுறை என்ற பெயரில் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தமாக பொருட்கள் வாங்க கொண்டு செல்லும் பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் அவற்றை பறிமுதல் செய்வதிலிருந்து தளர்வு அளிக்க வேண்டும் எனவும், அதேபோல் திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு மாடுகளை வாங்கவும் விற்கவும் கொண்டு செல்லும் பணத்தையும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு தளர்வு அளிப்பதோடு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வணிகர் சங்க அமைப்புகளை தொடர்பு கொண்டு அதனை நிவர்த்தி செய்து கொண்டு உடனடியாக பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...