ஓய்வூதியர்களுக்கு இணையதளம் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்று

தமிழ்நாடு அரசு கருவூலங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஓய்வூதியர்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 முதல் ஜுன் 30க்குள் கருவூலத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் அல்லது தங்களது உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வருடம் முதல் கூடுதல் வசதியாக ஜீவன் பிரமான் என்ற மத்திய அரசின் உயிர்வாழ் சான்றினை பெற்று கருவூல இணையதளத்தில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜீவன் பிரமான் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் கருவூலத்தில் அளிப்பதற்கான நடைமுறைகள்:-

1. தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்து, ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை தெரிவித்தால் அவர்களுக்கு மின்னணு வாழ்வு சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும்.

2. ஆதார் எண், ஓய்வூதிய கொடுவை எண், ஓய்வூதியம் அனுப்பும் அலுவலக விவரம் உள்ளிட்டவற்றை அரசு இ-சேவை மையத்தில் அளிக்க வேண்டும்.

ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக அனுப்பப்படுகின்ற உயிர்வாழ் சான்றுகள் உரிய கருவூலத்தில் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் சரிபார்த்து பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

ஜீவன் பிரமான் இணையதளத்தில் உயிர்வாழ் சான்றினை, ஓய்வூதியர்களுக்கு உரிய வசதிகள் இருப்பின் தனிப்பட்ட முறையிலும், மின்னணு உயிர்வாழ் சான்றினை ஜீவன் பிரமான மூலமாக அளிக்கலாம். அவை கருவூலத்தில் சரிபார்க்கப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...