அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே பாஜக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாஜக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நமக்கு போட்டியும் இல்லை, அவர்களால் வெற்றி பெறவும் முடியாது என திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி


திருப்பூர்: திருப்பூர் அரிசி கடைவீதியில் உள்ள திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல அதிமுக பொறுப்பாளருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டிருந்தார்.

இதனிடையே, தேர்தல் பணியாற்றுவது குறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி எனவும், நமது எதிரி திமுக எனவும், கடந்த முறை பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடிந்ததாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வளர்ந்து விட்டது போல ஒரு மாயையை அவர்கள் உருவாக்கி வருவதாகவும், ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை எனவும், இம்முறை அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை அதனால் அவர்கள் நமக்கு போட்டி இல்லை என பேசினார்.



இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு நம் பலத்தை காட்டக்கூடிய தேர்தல் எனவும் பேசினார். கடந்த முறை 38 எம்பிக்களை வைத்திருந்த திமுகவினர் என்ன செய்தார்கள் எனவும் இதற்கு முன் நமது எம்பிக்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக மக்களவையை முடக்கி உரிமைகளை பெற்றுத்தந்த வரலாறுகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், திருப்பூரில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடக் கூடிய சூழ்நிலையில் தற்போதுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொள்கை இல்லை எனவும் திமுகவிடம் அடிமையாகி விட்டதாக விமர்சனம் செய்து பேசினார். இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் எம் எஸ் எம் ஆனந்தன் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...