தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக உள்ளது - பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை தமிழகத்தில் வீசுவது உறுதி எனவும் திராவிட கட்சிகள் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என உடுமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேச்சு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வருகின்றது. இந்நிலையில், இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்பொழுது திமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள். அதிமுக சிதறிப் போய் உள்ளது. குறிப்பாக, மன்சூர் அலிக்கான் கூட்டணிக்கு வந்து கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் நிலையில் அதிமுக உள்ளது. எனவே, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்து வருகின்றது. எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை தமிழகத்தில் வீசுவது உறுதி எனவும், திராவிட கட்சிகள் தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என பேசினார்.



அதனை தொடர்ந்து, உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில விவசாய அணி செயலாளர் மௌன குருசாமி மற்றும் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...