வாக்குப்பதிவு இயந்திரங்கள் காங்கேயம் பாதுகாப்பு‌ அறையில் தயார் நிலை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.



திருப்பூர்: வரும் ஈரோடு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் 102 காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 295 வாக்குசாவடிகளுக்கு உண்டான 356 வாக்கு இயந்திரங்கள், 386 விவி பேடு ஆகியவை நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கயம் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை சீல் வைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...