கோவை தொண்டாமுத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு..!

தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


கோவை: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அந்தந்த மாவட்ட காவல் துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இன்று கோவையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் இன்று (மார்ச்.25) கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்ட காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், மத்திய பாதுகாப்பு படையினர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், என 200 பேருக்கு மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...