பாரத் அரிசி போல பாரத் தேங்காய் எண்ணெய்..! - பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்

பொள்ளாச்சி பாஜக சார்பில் "நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" என்னும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, வேட்பாளர் வசந்தராஜன், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உறுதியளித்தார்.


கோவை: பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" எனும் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே நடைபெற்றது.



நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் கலந்து கொண்டார்.



கூட்டத்தில், பங்கேற்ற தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் மேம்பட பாஜக வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.



அதைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் கலந்துரையாடிய வசந்தராஜன், பொள்ளாச்சி தென்னை விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது, எங்களது பிரதான வாக்குறுதியாக விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்பட வைப்பது தான். தற்போது தென்னை மரங்களை தாக்கி வரும் நோய் தாக்குதல், தண்ணீர் பிரச்சினை தேங்காய்க்கு உரிய விலை இல்லாதது, விவசாயிகள் கண்ணீர்சிந்தும் நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே, விவசாயிகளுடன் ஒருவனாக இருந்து அவர்களின் சிரமங்களை கேட்டறிந்து, மத்திய அரசு மூலமாக தீர்வு பெற்று தருவதே தனது குறிக்கோள் என்றார்.

ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் ஜெயித்த பின் விவசாயிகள் குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் "நிக்க வச்சு சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" என்பதை முன்னிறுத்தி எனது பிரச்சாரத்தை விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறேன், என்றார்.

மேலும், கயிறு தொழிற்சாலைகள் மேம்பாடு, ஆனைமலை நல்லாறு திட்டம், தேங்காய் எண்ணெயை பாரத் அரிசி என்பது போல் பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனையை கொண்டு வந்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் என்று வாக்களித்தார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தன்னை கேள்வி கேட்க அனைத்து உரிமையும் விவசாயிகளுக்கு உள்ளது என்று கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...