பாரத் அரிசி போல பாரத் தேங்காய் எண்ணெய்..! - பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்

பொள்ளாச்சி பாஜக சார்பில் "நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" என்னும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, வேட்பாளர் வசந்தராஜன், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உறுதியளித்தார்.


கோவை: பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" எனும் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே நடைபெற்றது.



நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் கலந்து கொண்டார்.



கூட்டத்தில், பங்கேற்ற தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் மேம்பட பாஜக வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.



அதைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் கலந்துரையாடிய வசந்தராஜன், பொள்ளாச்சி தென்னை விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது, எங்களது பிரதான வாக்குறுதியாக விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்பட வைப்பது தான். தற்போது தென்னை மரங்களை தாக்கி வரும் நோய் தாக்குதல், தண்ணீர் பிரச்சினை தேங்காய்க்கு உரிய விலை இல்லாதது, விவசாயிகள் கண்ணீர்சிந்தும் நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே, விவசாயிகளுடன் ஒருவனாக இருந்து அவர்களின் சிரமங்களை கேட்டறிந்து, மத்திய அரசு மூலமாக தீர்வு பெற்று தருவதே தனது குறிக்கோள் என்றார்.

ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் ஜெயித்த பின் விவசாயிகள் குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் "நிக்க வச்சு சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" என்பதை முன்னிறுத்தி எனது பிரச்சாரத்தை விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறேன், என்றார்.

மேலும், கயிறு தொழிற்சாலைகள் மேம்பாடு, ஆனைமலை நல்லாறு திட்டம், தேங்காய் எண்ணெயை பாரத் அரிசி என்பது போல் பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனையை கொண்டு வந்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் என்று வாக்களித்தார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தன்னை கேள்வி கேட்க அனைத்து உரிமையும் விவசாயிகளுக்கு உள்ளது என்று கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...