100 சதவீதம் வாக்களிப்பு:  மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு..!

பார்வை குறைபாடுடைய  மாற்றுத்திறனாளிகள், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.03.2024) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில், பார்வை குறைபாடுடையமாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடிமுன்னிலையில் எடுத்துக் கொண்டனர். 



இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் இருந்துபிரதிநிதிகளை தெரிந்தெடுத்து, அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் (பார்வை குறைபாடு, தொழு நோயிலிருந்து மீண்டவர்கள், செவித்திறன் குறைபாடு, லோகோ மோட்டர் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என 21 வகையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி வாக்களிக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...