கோவை மத்திய சிறையில் சிறை மெகா அதாலத்: 16 பேர் விடுதலை...!

கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம், சமரசம் செய்யக் கூடிய சிறு குற்றங்களில் தொடா்புடைய சிறைவாசிகளின் குற்றவழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கோவை: உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நேற்று (மார்ச்.27) கோவை மத்திய சிறையில் சிறை மெகா அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் மூலம் இந்த 4 மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சமரசம் செய்யக் கூடிய சிறு குற்றங்களில் தொடா்புடைய சிறைவாசிகளின் குற்றவழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சிறை மெகா அதாலத் நீதிமன்றத்தை, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் முன்னிலையில், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் கே.எஸ்.எஸ்.சிவா தொடங்கி வைத்தாா். 

இதில், கோவை மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சிறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிறைவாசிகளின் வழக்குகளை கோவை நீதித் துறை நடுவா்கள் சந்தோஷ், சுனில் வினோத் ஆகியோா் மூலம் 18 சிறைவாசிகளின் 21 வழக்குகளுக்கும், திருப்பூா் மாவட்ட நீதிமன்ற வரம்புகளுக்குள்பட்ட சிறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சிறைவாசிகளின் வழக்குகளை திருப்பூா் நீதித்துறை நடுவா் முருகேசன் மூலம் 3 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டன.

மேலும், சிறை மெகா அதாலத் நிகழ்ச்சியில், மொத்தம் 21 சிறைவாசிகளின் 24 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு 16 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனா். மற்ற சிறைவாசிகளுக்கு நிலுவையில் உள்ள பிற வழக்குகளின் காரணமாக அவா்கள் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்ற மெகா அதாலத் நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட நீதிமன்ற வரம்புக்குள்பட்ட வழக்குகளை விசாரிக்கும் வகையில், பவானி நீதித்துறை நடுவா் பரத்குமாா், நீலகிரி மாவட்ட வழக்குகளை விசாரிக்கும் வகையில் கோத்தகிரி நீதித் துறை நடுவா் வனிதா ஆகியோரும் பங்கேற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...