ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்..!

ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 9 விவசாயிகள், 204 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 91.80 குவிண்டால் கொப்பரை ரூ.7.16 லட்சத்துக்கு விற்பனையானது.


பொள்ளாச்சி: ஆனைமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி, இன்று (மார்ச்.28) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஏலத்தில், 

ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 9 விவசாயிகள், 204 மூட்டை கொப்பரைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 



அதில், முதல் தர கொப்பரை 48 மூட்டைகள் குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9155 க்கு விற்பனையானது. இரண்டாம்தர கொப்பரை 156 மூட்டைகள் அதிகபட்சம் ரூ.7850க்கு விற்பனையானது. மொத்தம் 91.80 குவிண்டால் கொப்பரை ரூ.7.16 லட்சத்துக்கு விற்பனையானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...