வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் சந்திரசேகர்

நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக வேட்பு மனுவை திரும்ப பெற்ற சந்திரசேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாவலட்சுமி என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் தற்சமயம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாத சூழலில் மைக் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னம் மூலம் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்யினருக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மற்றொரு கட்சிக்கு நாம் தமிழர் கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், குழப்பத்தை ஏற்படுத்தும் என பரவலாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் திருப்பூரில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த சந்திரசேகர் என்ற வேட்பாளர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் இம்முடிவை எடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதன் மூலம் வாக்குப்பதிவின்போது கரும்பு விவசாயி சின்னம் இடம்பெறாத சூழல் உள்ளது. இதனால் மைக் சின்னத்தை மேலும் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் இறங்கி உள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...