வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் சந்திரசேகர்

நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாக வேட்பு மனுவை திரும்ப பெற்ற சந்திரசேகர் என்பவர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாவலட்சுமி என்பவர் அறிவிக்கப்பட்டு அவரும் தற்சமயம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படாத சூழலில் மைக் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னம் மூலம் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்யினருக்கு இது பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மற்றொரு கட்சிக்கு நாம் தமிழர் கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால், குழப்பத்தை ஏற்படுத்தும் என பரவலாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் திருப்பூரில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த சந்திரசேகர் என்ற வேட்பாளர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வாக்கை பிரிக்க விரும்பவில்லை எனவும், தனது கட்சியின் மீது உள்ள அதிருப்தியின் காரணமாகவும் இம்முடிவை எடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதன் மூலம் வாக்குப்பதிவின்போது கரும்பு விவசாயி சின்னம் இடம்பெறாத சூழல் உள்ளது. இதனால் மைக் சின்னத்தை மேலும் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் இறங்கி உள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...