காங்கேயம் பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டுவதாக காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார்

குறைவான தண்ணீரே வருகின்றது என்றும், வரும் தண்ணீரின் அளவு எவ்வளவு என தெரிவிக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டபோது தங்களை தொலைபேசியில் தொடர்கொண்டு காங்கேயம் பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் பொதுப்பணித்துறை அதிகாரி மீது காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் குறைவான தண்ணீரே வருகின்றது என்றும், வரும் தண்ணீரின் அளவு எவ்வளவு என தெரிவிக்கவேண்டும் என அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தொலைபேசியில் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரி மிரட்டல் விடுத்ததாக கூறி காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்றி பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை.

எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...