மடத்துக்குளம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களைய கொண்டு வரவும் பாடுபடுவேன் என்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரத்தொழுவு மெட்ராத்தி ,கணியூர், துங்காவி, ஜல்லிபட்டி, குறிச்சி கோட்டை உட்பட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன.



இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் , மடத்துக்குளம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...