தாராபுரத்தில் சிவில் இன்ஜூனியரிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் கட்டுமான பணிக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பறக்கும் படையினர் தாராபுரம் பகுதியில் நடத்திய சோதனையில் சிவில் இன்ஜினியரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தேர்தல் பறக்கும் படை நிலை குழு அலுவலர் வெங்கடேசன் (மூலனூர் பிடிஓ) தலைமையில் தாராபுரம் கரூர் ரோடு கொளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது.



விசாரணையில் தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன்( வயது 27 )கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சம் ரொக்கம் பெற்று செல்வதாக கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.



தாசில்தார் இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் செந்தில் அரசனுக்கு தகவல் அளித்தார். செந்தில்அரசன் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை பார்வையிட்டு ரூ.10 லட்சத்தை டிரசரியில் செலுத்துமாறு உத்தரவிட்டார். தாராபுரத்தில் பட்டப்பகலில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...