தாராபுரத்தில் சிவில் இன்ஜூனியரிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் கட்டுமான பணிக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பறக்கும் படையினர் தாராபுரம் பகுதியில் நடத்திய சோதனையில் சிவில் இன்ஜினியரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தேர்தல் பறக்கும் படை நிலை குழு அலுவலர் வெங்கடேசன் (மூலனூர் பிடிஓ) தலைமையில் தாராபுரம் கரூர் ரோடு கொளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது.



விசாரணையில் தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன்( வயது 27 )கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சம் ரொக்கம் பெற்று செல்வதாக கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.



தாசில்தார் இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் செந்தில் அரசனுக்கு தகவல் அளித்தார். செந்தில்அரசன் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை பார்வையிட்டு ரூ.10 லட்சத்தை டிரசரியில் செலுத்துமாறு உத்தரவிட்டார். தாராபுரத்தில் பட்டப்பகலில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...