திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் பகுதிகளான பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாகவே திராவிட கட்சிகள் அனைத்து திமுக அதிமுக பொதுமக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக, அதிமுகவினர் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாரத பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்.



மேலும் தற்போது உள்ள திட்டங்கள் தொடரவும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், சனுப்பெட்டி ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பாமக, பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...