பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஒரு ஜோடி இரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை-பாலக்காடு கோட்டத்தில், எட்டிமடை-வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையே 'யானை வழிப்பாதை' அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, வரும் (04.04.2024) அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.1) அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல ஷோரனூரில் இருந்து (4.4.2024) 15.10 மணிக்குப் புறப்படும், ரயில் எண்.06804 ஷோரனூர்-கோயம்புத்தூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...