கல்லாறு பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் - பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

25 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்க எந்த குறைகளையும் அவர் தீர்க்கவில்லை என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சியை சேர்ந்த கல்லாறு பகுதியில் இன்று (ஏப்ரல்.2) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது மக்களிடையே பேசிய அவர், இந்த கல்லாறு கிராமத்தில் இருக்கின்ற ஆதிவாசி காலனி மற்றும் சமத்துவபுரம் ஆகிய சிற்றூர்களுக்கு இடையில், மேட்டுப்பாளையம் முதல் உதகை செல்லும் மலை இரயில் பாதை அமைந்துள்ளது. 150-க்கும் மேல் வீடுகள் அமைந்துள்ள, இந்த இரண்டு சிற்றூர்களையும் இணைக்கும் விதமாக சுரங்க நடைபாதை ஒன்று அமைத்துக் கொடுக்கச் சொல்லி, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்கள்.



ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும், புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக, 2011-12 நிதியாண்டு முதல் தனித்தனியே ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதியை வைத்து, நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு தேவைப்படுகிற பணிகளை மேற்கொள்வது தான் அடிப்படை தார்மீகம். அவ்வகையில், இந்த ஊர்மக்கள் சொல்வதுபடி பார்த்தால் 25 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இப்படி, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்கவும், எங்குமே குறைகளும் தீர்க்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும்படி கோரிக்கை வைத்த மக்களிடம், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...