சமூக வலைத்தளங்களில் பயணியர் குறை தீர்ப்பில் தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டம் முதலிடம்.

முன்பு எப்போதுமிராத அளவுக்கு இந்திய ரயில்வேயில் பயணியர் மற்றும் ரயில் உபயோகிப்போரின் குறைகள் தீர்ப்பதில் அதிக கவனம் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு திறனாய்வுக்கூட்டங்களில் இதன் முக்கியத்துவத்தை அதிகமாக வலியுறுத்தி வருகின்றனர்.

அத்தகு கூட்டங்களில் சமூக வலைத்தளங்கள் உட்பட்ட அனைத்து குறைதெரிவிப்பு முனையங்களிலும் தெரிவிக்கப்படும் குறைகளும், அவைகள் தீர்க்கப்பட எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசங்களும் சீராய்வு செய்யப்படுகின்றன. 

இந்திய ரயில்வே இவ்வாறு பெறப்பட்ட 90 சதவீத குறைகளை இது வரை தீர்த்து வந்துள்ளது. 

சமீபத்தில், ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு இது குறித்த ஓர் ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிப்பிதில் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மிக விரைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் கோட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களை விட விரைவாக, (திருச்சி கோட்டம்-454 நிமிடங்கள், பாலக்காடு கோட்டம்-402 நிமிடங்கள், சென்னைக் கோட்டம்-151 நிமிடங்கள், திருவனந்தபுரம் கோட்டம்-82 நிமிடங்கள்)   அதாவது 12 நிமிடங்களில் பதிலளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா, இவ்வாறு திறமையாக செயல்பட்டு பயணிகள் குறைதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் சேலம் கோட்ட முதுநிலை வணிகவியல் மேலாளர் விஜுவின் தலைமையிலான வணிகவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...