பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் ER. ஈஸ்வரன் பரப்புரை

பிஜேபி அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை. ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள். எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை. முதலமைச்சரை இயங்க விடுவதில்லை என்று பிரதமர் மோடியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் சாடினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய போது., மத்தியில் ஆளும் பிஜேபி அரசால் பத்தாண்டுகள் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆனால் நாடு முன்னேறி விட்டது என்று சொல்கின்றார்கள்.



மோடியை முன்னிறுத்தி உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து இந்தியா முன்னேறி விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை. ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள். எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை. முதலமைச்சரை இயங்க விடுவதில்லை. கடலுக்கு அடியில் சென்றும், வானத்தில் சென்றும், திருவள்ளுவரையும் சாமி கும்பிடுவர், ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ள மாட்டார். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் சிறு குறு தொழில்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது என ER.ஈஸ்வரன் பேசினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...