உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் – தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி

அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தால் ஆதரவு அளிப்பதாக வாக்கு கேட்க வந்த வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் உப்பாறு பாசன விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் குண்டடம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் வேனில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர் பாதை என்ற இடத்தில் ஆற்றல் அசோக்குமார் திறந்தவெனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார்.



அப்போது உப்பாறு பாசன விவசாயிகள் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் வேனில் ஏறி தங்கள் பகுதியில் உள்ள அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்து தந்தால் பாசன விவசாயிகள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.



இதனைக் கேட்ட வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சட்டப்படி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தின் போது மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன், பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், நகரச் செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக பன்னீர், வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...