உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் – தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி

அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தால் ஆதரவு அளிப்பதாக வாக்கு கேட்க வந்த வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் உப்பாறு பாசன விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் குண்டடம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் வேனில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர் பாதை என்ற இடத்தில் ஆற்றல் அசோக்குமார் திறந்தவெனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார்.



அப்போது உப்பாறு பாசன விவசாயிகள் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் வேனில் ஏறி தங்கள் பகுதியில் உள்ள அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்து தந்தால் பாசன விவசாயிகள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.



இதனைக் கேட்ட வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சட்டப்படி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தின் போது மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன், பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், நகரச் செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக பன்னீர், வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...