தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்ற நிலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திக்குமார் பாடி தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற பொதுதேர்தல் 2024 முன்னிட்டு, கடந்த 16.03.2024 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், சில தனியார் மற்றும் பொது அமைப்புகள் நடத்தக்கூடிய உள்ளரங்கு கூட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்து, முறையான அனுமதி பெறவேண்டும்.

மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கப்பதற்காக தனியார் கட்டிடங்களிலோ அல்லது வாகனங்களிலோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்படும் போது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடம் அனுமதிபெற்று, அது தொடர்பாக ஒப்புதல் கடிதம் பெறப்பட்ட பின்னரே ஒட்டப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற விவரத்தினை மூன்று நாட்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் அனுமதி பெறாமல் ஒட்டினால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகவே பார்க்கப்படும் என்பதோடு தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...