டீசல், பெட்ரோல் மீதான வாட்வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 வருட பழைய வாகன இயக்கத்தடை, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய லாரி உரிமையாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடருமென தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை தேக்கமடைந்து இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...