காங்கேயத்தில் மூத்த‌ குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான முதல் நாள் வாக்கு பதிவு தொடக்கம்

வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பிறகு எடுத்து செல்லப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் ஆகிய பகுதியில் உள்ள மூத்த‌ குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான முதல் நாள் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.



வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பின்னர் எடுத்து செல்லப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று வாக்கு சேகரித்தனர்.



தேர்தல் ஆணைய விதிகளின் படி 85 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த வாக்குபதிவிற்கு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் 9 பிரிவுகளாக பிரித்து அனைத்து பகதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வீடுவீடாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு பதிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...