தாராபுரம் அருகே 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 1லட்சத்து 57 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் இன்று ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த வரப்பாளையம் கிராமம் ராஜா என்பவரது மகன் அஜித் குமார் ஓட்டி வந்த எலக்ட்ரிக் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது சீட்டின் அடியில் ஆவணம் இன்றி மறைத்து வைத்திருந்த 1லட்சத்து 57ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தோட்ட கலைத்துறை உதவி இயக்குனருமான சசிகலா மற்றும் போலீசார் ஆசைத்தம்பி, துர்காதேவி ஆகிய பறக்கும் படை குழுவினர் ஆவணம் இன்றி அஜித்குமார் (வயது 24)எடுத்து வந்த ரொக்க பணத்தினை கைப்பற்றி தாராபுரம் கோட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அவர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாராபுரம் அரசு கருவூலத்தில் வைத்துள்ளார்.

மேலும் உரிய ஆவணங்களை காட்டி அஜித்குமார் பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸ் சார் அஜீத் குமார் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...