சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இணைந்து ஆனைமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் வாக்கு சேகரிப்பு

அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடன் இன்று வால்பாறை தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம், ஆலங்கடவு, பூச்நாரி, ஆத்து பொள்ளாச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அதிமுக வேட்பாளர் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கார்த்திகேயன், அதிமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை நிறுத்தி வைத்து திமுக அரசு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலையும், கூலியும் தராமல் கூலித் தொழிலாளர்களை திமுக அரசு வஞ்சித்து வருவதாகவும் எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை புறக்கணித்து பாடம் புகுத்த வேண்டும் என்றும் கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...