செங்கல் சூளை தொழிலை மீண்டும் கொண்டுவர முயற்சி - சின்னதடாகத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேச்சு

மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று வருவேன் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.


கோவை: கோவை சின்னதடாகம், சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய பகுதியில் அதிமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமாருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை உங்கள் ஊர்க்காரன்.



நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று வருவேன். ஒவ்வொரு ஊருக்கென்று ஒவ்வொரு தொழில் உண்டு. அதேபோல் இந்த பகுதியில் செங்கல் சூளை தான் முக்கியத்து தொழிலாக இருந்தது அதனை அழிய விடக்கூடாது. அது தான் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது.

எனவே மீண்டும் கொண்டுவர முயற்சி எடுப்பேன். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து ஒரு பெண்மணி ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி போட்டு எங்களுக்கு வயிற்று வலி வந்து விட்டதாக கூறினார். பால் விலை, கரண்ட் பில், தண்ணீர் வரி, வீட்டுவரி, சொத்து வரி என எல்லா வரிகளையும் ஏற்றிவிட்டனர். 3 ஆண்டடுகளில் திமுக ஒன்றும் செய்யவில்லை, 10 ஆண்டுகளில் மோடி இருந்தும் 10 பைசாவிற்கு பிரயோஜ்ஜனம் இல்லை கொரோனா காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரின் வீட்டிற்கும் 1 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கினோம். தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்து வெரும் மஞ்சள் கயிறோடு இருக்கின்றீர்கள். இவ்வாறு வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...