பெரியநாயக்கன்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து வரவேற்பு

பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ இன்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை. உங்கள் ஊர்க்காரன். நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று தருவேன் என்றார்

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...