தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார்

எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பரப்பரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அந்தியூர் அருகே தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் கூட தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்து கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தனது நேரத்தை திட்டமிட்டு முடக்குவதற்காக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளுடன் புகார் மனுவை அளித்துள்ளார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்தெல்லாம் கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்வதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனவும், அதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜூவிடம் விளக்கமாக எடுக்கக் கூறி புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...