தண்ணீரில் மிதந்து வந்த இறந்த ஆண் சிசுவின் உடலை அடக்கம் செய்த காங்கேயம் தனியார் அமைப்பினர்

காங்கேயத்தை சேர்ந்த‌ தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து இறந்த ஆண் சிசுவின் உடலை அரசு அனுமதி பெற்று சென்னிமலை சாலையில் உள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள பிஏபி கால்வாயில் பிறந்து 3 முதல் 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசு உடல் மிதந்து வந்தது. யாருடைய குழந்தை எங்கு இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் இறந்த குழந்தையின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காங்கயம்-தாராபுரம்‌ சாலையில் அமைந்துள்ள பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி கால்வாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஆண் சிசு உடல் ஒன்று மிதந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இந்த குழந்தை பற்றிய விவரங்களையும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கேயத்தை சேர்ந்த‌ (பசியை போக்குவோம் ) தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து அந்த ஆண் சிசுவை அரசு அனுமதி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து காங்கேயம் கொண்டு வந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் புதைத்தனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...