காரமடையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்திற்கு திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன் ஆதரவு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையைம் அருகே காரமடையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தில்லியில் நடைபெறும் விவசாயிகள் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், பவானியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கக்கோரியும், வன விலங்கு தொல்லையால் விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகளே வன விலங்குகளை துப்பாக்கியில் சுட்டு விரட்டவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடை கார் ஸ்டாண்டு அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, காரமடையில் திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிழச்சியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை திறந்து வைக்க வந்த திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜகதீசன், விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தந்து பேசினார்.

அவர் பேசுகையில், இந்த நாட்டின் முதுகெலும்பாக வாழ்பவர்கள் விவசாயிகள். இவர்களை புழு பூச்சிகளாக, கிள்ளு கீரைகளாக இந்த அரசாங்கம் நினைத்துக்கொண்டு இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகாலமாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாய குடும்பங்களில் பெரியர்கள் முதல் குழந்தைகள் வரை தற்கொலை செய்துகொண்டது இதுவே முதல் முறையாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை மதிக்காமல் உள்ளது. மேலும் பிரதமர் மோடி தமிழகம், கோவை வந்து சென்றார். தமிழகம் வந்த பிரதமர் விவசாயிகளின் குறைகளுக்கு செவி மடுக்காமல் சென்றது வேதனையளிக்கிறது என பேசினார். 

முன்னதாக, காரமடையில் நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...