லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் பம்புசெட் நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் தகவல்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டு பம்புசெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிர்பாராதது. மேலும், கோவையில் இயங்கிவரும் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும். சுமார் 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவையில் இயங்கிவரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மூலப் பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல கோடி பெறுமானமுள்ள பம்புசெட்டுகள் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சைமா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...