யுகாதி பண்டிகையை முன்னிட்டு உடுமலை திருப்பதி கோவிவில் திருக்கல்யாணம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை விழா இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கோவிலுக்கு அருகே உள்ள புற்றுகோவில் கம்ம குல தேவதை ரேணுகாதேவி அம்மனுக்கு நாள்தோறும் பஜனை பாடல்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து நாம சங்கீர்த்தனம்- பிருந்தாவனம் நிகழ்வும், பஜனையும் நடைபெறுகிறது.



நேற்று மாலை 5 மணிக்கு புற்று பூஜையை தொடர்ந்து பாலாற்று பூஜையும், உடுமலை திருப்பதி கோவில் வளாகத்தில் ரேணுகாதேவி அம்மனுக்கு சக்தி அழைப்பும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை பத்மாவதி தாயார் மண்டபத்தில் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக உடுமலை திருப்பதி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பும், 2-ம் நிகழ்வாக ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, சுத்தி புண்யாகம், விநாயகர் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. 3-ம் நிகழ்வாக வேள்வி வளர்த்தப்பட்டு அக்னி சாட்சியுடன் ஸ்ரீஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ஜமத்கனி மகரிஷி ரேணுகாதேவி ஆகியோர் திருக்கல்யாண கோலத்தில் பரசுராமருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அனைவரும் மனம் உருகி ரேணுகாதேவி அம்மனிடம் கோரிக்கைகளை சொல்லி வழிபாடு செய்தனர். இதையடுத்து கோ பூஜை, கண்ணாடி தரிசனம், கன்னிகா பூஜை, ராஜ தரிசனம், தம்பதி பூஜை, தீபாராதனை, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

திருப்பதி கோவிலில் யுகாதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...