வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதியில் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

உங்கள் கணவர் மின்சார துறையில் வேலை செய்துவருவதால், உங்களுக்கு வீடு வழங்க இயலாது நீங்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று மாலா என்ற தொழிலாளியிடம் எஸ்டேட் நிர்வாகத்தினர் அடாவடியாக பேசியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உருளிகள் எஸ்டேட் பகுதி உள்ளது.இங்கு சுமார் 2000 க்கு மேல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு நிறுவனமே வீடு வழங்கி வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் உருளிகள் இரண்டாவது டிவிஷனில் வசித்து வரும் மாலா வயது 47 தனது கணவருடன் எஸ்டேட் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார். கணவர் மின்சார அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

மாலா எஸ்டேட் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருவதால் அவர்களுக்கு குடியிருப்பு வழங்கப்பட்டு உள்ளது.நேற்று மதியம் எஸ்டேட் நிர்வாகம் மாலா அவர்களுடைய வீட்டை காலி செய்து தரும்படி வீட்டை பூட்டு போட்டு அடைத்து உள்ளனர். மாலா எஸ்டேட் வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து மாலை வந்து பார்க்கும் பொழுது வீட்டு பூட்டப்பட்டுள்ளது.அக்கம் பக்கத்தில் கேட்கும் பொழுது எஸ்டேட் அலுவலர்கள் வந்து வீட்டை பூட்டியதாக தெரிவித்துள்ளனர்.



உடனடியாக எஸ்டேட் நிர்வாகதினரிடம் கேட்கும் போது உங்கள் கணவர் மின்சார துறையில் வேலை செய்து வருகிறார். உங்களுக்கு வீடு வழங்க இயலாது நீங்கள் தங்கி இருக்கும் வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து வீட்டை திறக்க மறுத்த நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தை ஈடுபட்டனர்.

வால்பாறையில் இருந்து சோலையாறு அணை செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்பு இரவு 9 மணி அளவில் தொழிற்சங்க தலைவர் அமீது மற்றும் காவல் துறையினர் பொதுமக்களுடன் சமரசம் பேசி சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் பூட்டிய வீட்டை எஸ்டேட் நிர்வாகம் திறந்து கொடுத்துள்ளனர்.இது சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...