கோவை செல்லும் ரயில்கள் போத்தனூருடன் நிறுத்தம்;  மெமு ரயில் சேவை 2 நாட்கள் நிறுத்தம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக, மதுரை, கண்ணூா், ஷோரனூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். அதே போல 13, 14 தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் மெமு இரயில் சேவை நிறுத்தப்படும்  என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை:சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால், கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் படி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும். 

மறுமாா்க்கமாக,மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

கேரள மாநிலம் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் - பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், பாலக்காடு - ஈரோடு விரைவு ரயில் ஏப்.13 - ஆம் தேதி கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

கோவை - மதுரை, கோவை - கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில்கள் போத்தனூரில் இருந்து புறப்பட்டு மதுரை, கண்ணூா் சென்றடையும்.

இதுபோல், ஷோரனூா் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஏப்.13, 14 ஆகிய தேதிகளில் கோவை செல்வதற்கு பதிலாக போத்தனூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...