ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்பதை வலியுறுத்தி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் வலியுறுத்தினர்.


கோவை: கோவையில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.



இந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் ஒரு 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஓட்டுக்கு பணம் தர மாட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை படுகொலை செய்து இருக்கிறார்கள். இந்தியாவின் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதனால் இந்த கட்சிகள் எல்லாம் உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்றால் இந்த மாபெரும் அரசியல் கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே ஜனநாயகத்தை காப்பாற்றுவார் என்றால் இந்த மாபெரும் கட்சித் தலைவர்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தலைவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஜனநாயக தலைவராக அவர்கள் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை கோயம்புத்தூருக்கு வர இருக்கிறார். கோயம்புத்தூரில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் ஓட்டுக்கு பணம் கொடுக்காது என்று அறிவிக்க வேண்டும். அதைப்போல அனைத்து கட்சிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எங்கள் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். அதேபோல பாரத கட்சி ஜனநாயக கட்சி இவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க வேண்டும் எங்களுடைய கோரிக்கை என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...