திருப்பூரில் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்-15 டன் பிரியாணி ஒரே நாளில் விற்பனை

வழக்கமாக 50 கடைகளையும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரம்ஜான் தினமான இன்று காங்கேயம் கிராஸ் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் தினத்தன்று அனைத்து தரப்பு மக்களும் பிரியாணி உண்ணும் ஆசையில் ஏராளமான கடைகளில் பிரியாணி வாங்க திரண்டதால் ஏராளமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக காங்கேயம் கிராஸ் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரபல பிரியாணி கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பிரியாணி வாங்கி சென்றனர். வழக்கமாக அப்பகுதியில் உள்ள 50 கடைகளுக்கும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...