இது உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது - உடுமலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றால் பலர் பலன் அடைந்துள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வாளவாடி பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாக்குகள் சேகரித்தனர்.



அப்போது அவர் பேசியதாவது,



கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதிகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டங்களால் பலர் பலன் அடைந்துள்ளனர். மேலும் நியாய விலை கடைகளில் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவச அரிசையும் வழங்கபட்டு வருகிறது.

விவசாயிகள் நலனை மேம்படுத்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றார். எனவே உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது. மத்தியில் டெல்லியில் ஆளும் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்புக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேசும் பொழுது, தமிழகத்தில் திமுக அதிமுக அரசுகள் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடு செய்து மக்களுக்கு குறைவாக கொடுத்து வருகிறார்கள். மேலும் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே அமைச்சர் சக்கரபாணி மூலம் போடப்பட்ட வேட்பாளர் தான் தற்பொழுது திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, எனவே இந்த திட்டத்தை பாஜக கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிவித்தார் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...