மூலனூரில் முருங்கை ஏற்றுமதி தொழிற்சாலை அமைக்கப்படும்-தாராபுரத்தில் ஜி.கே. வாசன் உறுதி

தாராபுரம், குண்டடம் பகுதியில் அதிகம் விளையும் சின்ன வெங்காயம், தக்காளி போன்ற பயிர்கள் விலை சரியும் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க குளிர்சாதன கிடங்குவசதி மத்திய அரசு உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் முருங்கை ஏற்றுமதி தொழிற்சாலை அமைக்கப்படும் என ஜி.கே.வாசன் உறுதி அளித்தார்.

ஈரோடு எம்பி தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து தாராபுரம் காந்தி சிலை முன்பு பாஜக மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது

மத்திய அரசு 10 ஆண்டுகளில் பல எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொதுமக்கள் மோடி அரசின் திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையான ஈரோடு பழனி ரயில் திட்டம் நிறைவேற்றப்படும். மேலும் தாராபுரம், குண்டடம் பகுதியில் அதிகம் விளையும் சின்ன வெங்காயம், தக்காளி போன்ற பயிர்கள் விலை சரியும் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதை அறிந்து குளிர்சாதன கிடங்குவசதி மத்திய அரசு உதவியுடன் ஏற்படுத்தி தரப்படும்.



மூலனூர் பகுதியில் விளையும் முருங்கைக்காய் கொண்டு ஏற்றுமதி ரக பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் ஏற்படுத்தி தரப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. திமுக, அதிமுக கட்சிகளுக்கு வாக்களித்தால் யார் மத்தியில் பிரதமர் என்று அவர்களால் கூற முடியாது. தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசருடன் பேசி பெற்றுத் தர முடியாது. தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயகுமார் தாராபுரம் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தவர். விவசாயத்தைப் பற்றி நன்கு அறிந்தவர். அவருக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஐந்து வினாடிகள் ஓட்டு போடுவதற்கு முன்பு யோசிக்காவிட்டால் ஐந்து ஆண்டுகள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே மத்தியில் மோடி தலைமையில் அமையும் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். முன்னதாக ஜி.கே. வாசன் வந்தபோது தமாகா துண்டு மட்டும் அணிந்திருந்தார். அவருக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் பாஜக, பாமக துண்டுகள் வழங்கப்பட்டது. அதை அவர் கழுத்தில் அணிந்து கொண்டார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...