கோவை வீரபாண்டியில் மோடி அரசின் மளிகை பொருட்களின் விலை பட்டியலுக்கு மாலை போட்டு ஆ.ராசா பிரச்சாரம்

வரவு எட்டணா செலவு பத்தணா என்ற காங்கிரஸ் ஆட்சியில் 2014 இல் மளிகை பொருட்களின் விலை மற்றும் மோடியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை பட்டியல் உடன் கடை அமைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்வையிட்டு மோடியின் விலைப்பட்டியல் அடங்கிய மளிகை பொருட்களுக்கு மாலை அணிவித்து ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் இன்று நீலகிரி தொகுதிக்குட்பட்ட கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு பேசிய ஆ.ராசா, கொரோனா காலகட்டத்தில் முதல்வராக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்தி இந்தியாவிலேயே கொரோனாவை கட்டுப்படுத்திய முதல் முதலமைச்சர் என சான்றிதழ் பெற்றார்.



எடப்பாடி பழனிசாமி ஊதாரித்தனமாக ஆட்சி நடத்தி ஐந்து லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார். அதனை அடைத்து அதன் பிறகு குடும்பக்காடுக்கு நான்காயிரம் கொடுத்த ஒரே முதலமைச்சர். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் தருவேன் என்றார். இந்தியாவிலேயே யாரும் தராத திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தினார்.

அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார் அதையும் தந்தார். மதிய உணவை காமராஜர் கொண்டு வந்தார். அதை சத்துணவு எம்ஜிஆர் மாற்றினார். அதை உண்மையான சத்துணவாக டாக்டர் கலைஞர் கொண்டு வந்தார். அதையும் தாண்டி காலை சிற்றுண்டி வழங்கியவர் நமது முதலமைச்சர்.

வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை பெற்று கப்பல் தொழிற்சாலை, கார் தொழிற்சாலை என பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை பெருக்கியவர் நமது முதலமைச்சர். எனவே அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வரவு எட்டணா செலவு பத்தணா என்ற காங்கிரஸ் ஆட்சியில் 2014 இல் மளிகை பொருட்களின் விலை மற்றும் மோடியின் 2024 ஆம் ஆண்டு ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை பட்டியல் உடன் கடை அமைக்கப்பட்டு இருந்தது அதனை பார்வையிட்டு மோடியின் விலைப்பட்டியல் அடங்கிய மளிகை பொருட்களுக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...